அவினாசிலிங்கம் பல்கலை., நடத்தும் மாநில அளவிலான கபடி போட்டிகள்

கோவை: அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான கபடி போட்டிகள் அக்கல்லூரியின் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

கோவை: அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான கபடி போட்டிகள் அக்கல்லூரியின் மைதானத்தில் நேற்று தொடங்கியது.



இதில், தமிழகம் முழுவதும் இருந்தும் 10 பெண்கள் பிரிவு உட்பட மொத்தம் 34 அணிகள் பங்கேற்றன.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில், ஆண்கள் பிரிவில் மெட்ராஸ் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம், மற்றும் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக அணிகள் இன்று நடைபெறும் லீக் போட்டிக்கு தகுதி பெற்றன. 

இந்த போட்டிகளை, அவினாசிலிங்கம் பல்கலை.,யின் இயக்குனர் சரோஜா பிரபாகரன் தொடங்கி வைத்தார். 



இதில் வெற்றி பெரும் அணிகளுக்கு ஐந்து லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Newsletter