பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அபார வெற்றி

கோவை: பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி அபார வெற்றி பெற்றுள்ளது.

கோவை: பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி அபார வெற்றி பெற்றுள்ளது.

கோயம்புத்தூர் யுனெய்டடெட் ரவுண்ட் டேபிள் 186 என்ற கோப்பைக்கான பள்ளிகள் அளவிலான போட்டி இன்று பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி இறுதி போட்டிக்குள் நுழைந்து விளையாடினர். இதில் 50 ஓவர்கள் முடிவில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி 351 ரன்கள் குவித்தது. அப்பள்ளியின் ஹரி ஷங்கர் 201 ரன்களையும், சச்சின் 105 ரன்களையும் எடுத்து இந்த அபாரமான ரன்களை குவித்தனர்.

கடினமான இலக்குடன் விளையாடிய ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி 38.5 ஓவர்கள் முடிவில் 130 ரன்களை குவித்தது. வெற்றி பெற்ற ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி கோப்பையை தட்டிச் சென்றது.

Newsletter