தொடர்ந்து 4-வது முறையாக மாநில அளவிலான போட்டியில் கோவை அணி சாம்பியன் : இளம் வீராங்கனைகளுக்குப் பாராட்டு விழா

கோவை : மாநில அளவிலான தமிழ்நாடு கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ச்சியாக 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கோவை மாவட்ட கூடைப்பந்து சப்-ஜூனியர் மகளிர் அணிக்கு கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

கோவை : மாநில அளவிலான தமிழ்நாடு கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ச்சியாக 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கோவை மாவட்ட கூடைப்பந்து சப்-ஜூனியர் மகளிர் அணிக்கு கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

கோவை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள மாவட்ட கூடைப்பந்து கழக அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கும், அவர்களை வழிநடத்திய பயிற்சியாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில், கழகத் துணைத் தலைவர் சி.ஆனந்த், செயலாளர் (பொறுப்பு) எஸ்.சுரேஷ், தொழில்நுட்பப் பிரிவைச் சார்ந்த ஏ.சந்திரன், மேலாளர் எஸ்.பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். 

தஞ்சாவூரில் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் மொத்தம் 32 மாவட்டங்களைச் சார்ந்த அணிகள் பங்கேற்றன. கோவை மாவட்டம் சார்பில் பயிற்சியாளர் முருகேசன், உதவி பயிற்சியாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் கோவை மாவட்ட அணி பங்கேற்று, வெற்றி வாகை சூடியது.

இவ்விழாவில் மொத்தம் 12 வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் தமிழ்நாடு அணிக்காக தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இமாச்சல் பிரதேசத்தில் உள்ள காங்கர மாவட்டத்தில் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter