தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டிக்கு கோவையைச் சேர்ந்த மாணவன் தகுதி

கோவை : கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டிக்கான தகுதிசுற்றுப் போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவன் முதலிடம் பிடித்துள்ளார்.

கோவை : à®•ோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டிக்கான தகுதிசுற்றுப் போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவன் முதலிடம் பிடித்துள்ளார்.

எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் பள்ளியின் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் என இருபாலாருக்கும் நடைபெற்ற இந்தப் போட்டிகள், யு14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்கள் என தனித்தனியே நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளை எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளியின் நிர்வாக இயக்குநர் வி. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.



இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பிடித்தவர்களின் விபரம் பின்வருமாறு :-

மாணவர்கள் :

ஜே. மைக்கேல் ஆண்டனி (சி.எம்.எஸ். பள்ளி., கோவை)

ஏ. ஆதித் குமரேசன் ( வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, சென்னை)

எல். கிரிஸ்டோபர் (காரைக்குடி மகரிஷி வித்யா மந்தீர்)



மாணவிகள் : 

ஜே.ஶ்ரீமதி ( செயிண்ட் ஜோசப் எச்.எஸ்.எஸ்., தூத்துக்குடி)

பி. பவித்ரா (மதுரை அரசு மேல்நிலை பள்ளி)

சி. குணமணி ( சிதம்பரம் செட்டியார் பெண்கள் பள்ளி, சிவகங்கை)

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் இந்த ஆண்டின் இறுதியில் புனேவில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter