பல்கலைக்கழகத்திற்கு இடையிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் பி.எஸ்.ஜி., கல்லூரி மாணவி

கோவை : சண்டிகரில் நடைபெற்ற பல்கலைக்கழகத்திற்கு இடையிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி மாணவி நிவேதா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கோவை : சண்டிகரில் நடைபெற்ற பல்கலைக்கழகத்திற்கு இடையிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி மாணவி நிவேதா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

பல்கலைக்கழகத்திற்கு இடையிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா முழுவதும் 1,400-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சுடும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பிலும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பங்கேற்ற பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி நிவேதா (எம்.காம்.ஐ.பி.) 576 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்று அசத்தினார். இவரைத் தொடர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிவேதா ஆர்ஜு மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் மலைக்கா கோயல் தலா வெள்ளி மற்றும் வெண்கலத்தை வென்றனர். 



இதேபோல, பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஜி.வர்சா, வி. ஸ்ரீநிதி அபிராமி, என். காயத்ரி ஆகியோர் அடங்கிய அணி 50 மீட்டர் மற்றும் 50 மீ ஸ்போர்ட்ஸ் ரைபிள் பிரோன் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கத்துடன், மொத்தம் 3 பதக்கங்களைப் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Newsletter