தேசிய அளவிலான போட்டியில் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியின் என்.சி.சி. படை தங்கம் வென்று சாதனை

கோவை : டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியைச் சேர்ந்த தேசிய மாணவர் படை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.


கோவை : டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியைச் சேர்ந்த தேசிய மாணவர் படை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான தால் சைனிக் போட்டியில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் & நிகோபார் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 16 இயக்குனரகத்தைச் சேர்ந்த 600 என்.சி.சி. படையினர் கலந்து கொண்டனர். இதில், தமிழகம், புதுச்சேரி, அந்தமான் & நிகோபார் பகுதிகளைச் சேர்ந்த படைகளே முக்கிய இடங்களைப் பிடித்து கோப்பைகளைக் கைப்பற்றியது. மேலும், கார்வால் நடந்த போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. 



குறிப்பாக, ப்ளையிங் பிரிவில் (ஆண்கள்) ஆர். ஜெயந்த்குமார் தங்கமும், (பெண்கள்) பி. கவுசல்யா வெள்ளியும் வென்றனர். இதேபோல, மாதிரி விமானம் தயாரிக்கும் போட்டியில் மெல்வின் ஜார்ஜ் மற்றும் எஸ். ராஜசேகர் ஆகியோர் தங்கத்தைக் கைப்பற்றி அசத்தினர். லினார்டு செல்வா, கணேஷ்குமார் ஆகியோர் சரியான முறையில் விமானத்தை இயக்குதல் போட்டியில் வெள்ளி வென்றனர். மேலும், இன்ஃபான்ட் ராஜ், எம். புவனேஸ்வரன் ஆகியோர் விமானத்தை சிறந்த முறையில் கட்டுப்படுத்துதல் போட்டியில் வெண்கலத்தை ஜெயித்தனர்.

வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் புதுச்சேரி, அந்தமான், நிகோபார் தீவு மற்றும் தமிழக அரசு சார்பில் விருது மற்றும் ஊக்கத்தொகை அளிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பி.எஸ்.ஜி. கல்லூரியின் தேசிய மாணவர் படையானது, நாட்டில் சிறந்த பயிற்சித் தளமாக திகழ்ந்து வருகிறது. 

நாட்டிலேயே முதல்முறையாக இந்த இயக்குனரகத்தில்தான் வீரர்களுக்கான விமானப் பயிற்சி, படகு ஓட்டுதல், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கும் வசதிகள் உள்ளன. இதன் காரணமாகவே அவர்கள் இதுபோன்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடிகிறது," என்கிறார் துணை இயக்குநர் விஜிஸ் கே கார்க். 

Newsletter