காவல்துறைக்கான 58-வது உள்மண்டல விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற கோவை போலீசார் கவுரவிப்பு

கோவை : காவல்துறைக்கான 58-வது உள்மண்டல விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற கோவை மாவட்ட காவலர்களை மாநகர காவல் ஆணையர் சுமித் ஸரன் கவுரவித்தார்.

கோவை : காவல்துறைக்கான 58-வது உள்மண்டல விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற கோவை மாவட்ட காவலர்களை மாநகர காவல் ஆணையர் சுமித் ஸரன் கவுரவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் காவல்துறைக்கான 58-வது உள்மண்டல விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம் சார்பில் பங்கேற்ற ஆர். சண்முகம் (சரவணம்பட்டி காவல்நிலையம்), பி. சரவணன் (அதிதீவிர குற்றவியல் படை), கே.கே. கார்த்திக் (ஆயுதப்படை) ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்று குவித்தனர். 

குறிப்பாக, காவலர் ஆர். சண்முகம் தனி கட்டா (60கி), தனி குமிட்டி, குழு கட்டா ஆகிய போட்டிப் பிரிவுகளில் தங்கம் வென்றார். காவலர் பி. சரவணன் மற்றும் காவலர் கே.கே. கார்த்திக் ஆகியோர் தனி குமிட்டி (84+கி), குழு கட்டா பிரிவுகளில் தங்கம் வென்றார். இதில், சென்னை நகர காவல்துறையினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். மேற்கு மண்டல அணி 2-வது இடத்தை பிடித்தது. இதனிடையே, கோவை சார்பில் பங்கேற்று பதக்கங்களை வென்ற காவலர்களை மாநகர காவல் ஆணையர் சுமித் சரன் கவுரவித்தார்.

Newsletter