தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு கோவையைச் சேர்ந்த மாணவன் தகுதி

கோவை : பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்ற கோவையைச் சேர்ந்த மாணவன், தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.


கோவை : பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்ற கோவையைச் சேர்ந்த மாணவன், தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கராத்தே போட்டி ஈரோடு மாவட்டம் வெள்ளாளர் வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 1,700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கோவையைச் சேர்ந்த லிஷியக்ஸ் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஹரிமாறன் தங்கம் வென்று அசத்தினார். 

இதன் மூலம், மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு ஹரிமாறன் தகுதி பெற்றுள்ளார். 

Newsletter