மாநில அளவிலான தடகளப் போட்டியில் கோவை வீரர் புதிய சாதனை

கோவை : மாநில அளவிலான தடகளப் போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் 2 தங்கப் பதக்கங்களை வென்றதுடன், புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

கோவை : மாநில அளவிலான தடகளப் போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் 2 தங்கப் பதக்கங்களை வென்றதுடன், புதிய சாதனையையும் படைத்துள்ளார். 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இருக்கும் பாரதி மைதானத்தில் மாநில அளவிலான 61-வது குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், ஜென்னிஸ் விளையாட்டு கிளப்பைச் சேர்ந்த வைரவநாதனின் கீழ் பயிற்சி பெற்ற கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வரும் எம். சதீஷ்குமார் கலந்து கொண்டார். 5,000 மீ தொடர் ஓட்டத்தை 15.31 நிமிடங்களில் கடந்து தங்கம் வென்றதுடன் புதிய சாதனைப் படைத்தார். மேலும், 16.13 நிமிடங்களில் கடந்ததாக இருந்த எஸ். கிருபாகரனின் முந்தைய சாதனையையும் அவர் முறியடித்தார். அதோடு, 3,000 மீ ஓட்டப் பந்தய இலக்கை வெறும் 08.49 நிமிடங்களில் கடந்து மேலும் ஒரு தங்கத்தை வென்றார் சதீஷ்.

"ஏற்கனவே, ராஞ்சியில் நடந்த 34-வது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கமும், ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்ற சதீஷ்குமார், தற்போது மாநில அளவிலான 61-வது குடியரசு தின விளையாட்டுப் போட்டி மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று கோவை மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்," இவ்வாறு கூறினார் அவரது பயிற்சியாளர் வைரவநாதன்.



அதேவேளையில், ஜென்னிஸ் விளையாட்டு கிளப்பைச் சேர்ந்த சகவீரர் கோகுல், 5,000 மீ. போட்டியில் வெள்ளியும், மகளிருக்கான 400 மீ. போட்டியில் சி. விகாசினி வெண்கலமும் வென்றனர். அதோடு, 17 வயதுக்குட்பட்டோருக்கான 100 மீ. தடை தாண்டுதல் போட்டியில் சி. விஷ்ருதா வெள்ளியைக் கைப்பற்றினார். 



இந்தப் போட்டியில் சாதனை படைத்த ஜென்னிஸ் விளையாட்டு கிளப்பைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் விஷ்ருதா ஆகியோர் இந்த ஆண்டு டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 

Newsletter