திருப்பூர் அரசு கலை கல்லூரியில் மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி தொடக்கம்

திருப்பூர் : மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி திருப்பூர் அரசு கலை கல்லூரியில் தொடங்கியது.

திருப்பூர் : மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி திருப்பூர் அரசு கலை கல்லூரியில் தொடங்கியது. 



தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ஆண்டுதோறும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின. இதன் ஒரு பகுதியாக, டேக்வாண்டோ போட்டி திருப்பூர் சிக்கண்ணா கலை கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் மண்டல வாரியாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டர். வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Newsletter