தேசிய அளவிலான தடகள போட்டிகளில் பதக்கங்களை பெற்ற கோவை வீரர்கள்

கோவை: கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக, தேசிய அளவிலான தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர் கோவையை சேர்ந்த தடகள வீரர்கள்.

கோவை: கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக, தேசிய அளவிலான தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர் கோவையை சேர்ந்த தடகள வீரர்கள்.

ரிலையன்ஸ் யூத் பவுண்டேசன் சார்பில் மும்பையில் தேசிய அளவிலான தடகள போட்டிகள் கடந்த 14-ம் தேதி நடைபெற்றன. 

இதில், கோவையைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் பயிலும் சதிஷ்குமார் என்ற மாணவர் 5000 மீட்டர் ஓட்டப்போட்டியிலும், 1500 மீட்டர் ஓட்டப்போட்டியிலும் முதலிடத்தை பெற்று இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார்.



இதே போல், ஜி.ஆர்.டி பள்ளியைச் சேர்ந்த விஸ்ருதா என்ற மாணவி 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் கிருத்திகா என்ற மாணவி மற்றும் ஜி.ஆர்.டி பள்ளியைச் சேர்ந்த விகாஷினி என்ற மாணவி ஆகிய இருவரும் முறையே 2000 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்போட்டிகளில் தலா ஒரு வெண்கல பதக்கங்களை வென்றனர்.



கல்லூரி மாணவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் பி.எஸ்.ஜி கலை கல்லூரியை சேர்ந்த பிரவீன் குமார் வெள்ளி பதக்கத்தையும், உயரம் தாண்டும் போட்டியில் அதே கல்லூரியை சேர்ந்த திவாகர் வெள்ளி பதக்கமும் பெற்றார்.



400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றது. அதே கல்லூரியை சேர்ந்த மற்றொரு அணி, மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.



Newsletter