பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் ராமகிருஷ்ணா பள்ளி அணி சாம்பியன்

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ். அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ். அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.  

டி.எஸ்.எஸ். & கோ டிராபிக்கான (16 வயதுக்குட்பட்டோர்) பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ். பள்ளியும், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா உயர்நிலைப் பள்ளி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், ராமகிருஷ்ணா அணி 172 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து, விளையாடிய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுக்களை இழந்தது. இதனால், அந்த அணியால் 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதன் மூலம், 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராமகிருஷ்ணா பள்ளி அணி டி.எஸ்.எஸ். & கோ டிராபியை கைப்பற்றி அசத்தியது. 

Newsletter