மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்

கோவை : மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் இன்று தொடங்கியது.

கோவை : மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் இன்று தொடங்கியது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலச்சங்கம் சார்பில் நடத்தப்படும் இப்போட்டியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 32 சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட மனநலம் குன்றிய, பார்வையற்ற, காது கேளாதவர்கள் போன்ற மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



அவர்களுக்கு 50மீ, 100மீ, உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகளை மாவட்ட தலைமை கல்வி அதிகாரி அய்யண்ணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நலச்சங்கத் தலைவர் சி.கே. தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வரும் டிச.,3-ம் தேதி நடக்கிறது.



Newsletter