ஜெய்பூரில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : கோவைக்கு வெண்கல பதக்கம்

கோவை : ஜெய்பூரில் நடந்த 62- ம் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை அணியினர் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.

கோவை : ஜெய்பூரில் நடந்த 62- ம் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை அணியினர் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் துப்பாக்கி சுடுதல் ஷாம்பியன்ஷிப் போட்டி வெவ்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 62-ம் தேசிய துப்பாக்கி சுடுதல் ஷாம்பியன்ஷிப் போட்டி ஜெய்பூரில் நவம்பர் 16 அன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து பல்வேறு வீரர்கள் வந்து கலந்து கொண்டனர்.



இதையெடுத்து தமிழ்நாட்டின் சார்பில் கோவை ரைஃபில் கிளப் சார்பில் நிவேதிதாவும், புதுக்கோட்டை ராயல் ஸ்போட்ஸ் கிளப் சார்பில் ப்ரித்திவி ராஜ் தொன்டைமானும் ஒரே அணியாக இணைந்து கலந்து கொண்டனர். அடுத்தடுத்தப் போட்டிகளில் சிறந்த முறையில் பங்கெடுத்து நவம்பர் 23 அன்று வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளனர்.



இப்போட்டிகளில், பஞ்சாப் அணியினர் தங்க பதக்கத்தையும், டெல்லி அணியினர் வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர். மேலும், வெவ்வேறு பிரிவுகளில் நடைபெறும் இந்த நேஷனல் ஷாம்பியன்ஷிப் போட்டி டிசம்பர் 3-ம் தேதியில் நிறைவடைகிறது.

Newsletter