மாநில அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி கல்லூரி அணி சாம்பியன்

கோவை : நஞ்சப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோப்பை வென்றது.

கோவை : நஞ்சப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோப்பை வென்றது.

திருப்பூர் மாவட்டம் நஞ்சப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், அங்கீகரிக்கப்பட்ட 7 திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து கழகம், திருப்பூர் கூடைப்பந்து குழு ஆகியவை இணைந்து தமிழ்நாடு கூடைப்பந்து போட்டிகளை நடத்தியது. கடந்த 22-ம் தேதி தொடங்கி நேற்று வரை கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.

பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி விளையாட்டு கழகத்திற்கிடையே இறுதிச் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 26 புள்ளிகள் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது. 

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சென்னையில் டிசம்பர் 5 முதல் 9-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு உள்மண்டல கூடைப்பந்து போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்களாவர்.

Newsletter