சி.பி.சி. கோப்பைக்கான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி டிச., 26-ம் தேதி தொடக்கம்

கோவை : கோவை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் சி.பி.சி. கோப்பைக்கான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

கோவை : கோவை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் சி.பி.சி. கோப்பைக்கான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. 

10 ஓவர்களாக நடத்தப்படும் இந்தப் போட்டிக்கான அணிகள் பதிவு செய்ய இறுதி நாள் வரும் 15-ம் தேதி கடைசி நாளாகும். இந்தப் போட்டித் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 25,000 ரொக்கம், சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதேபோல, 2,3 மற்றும் 4-வது இடங்கள் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ. 15,000, ரூ. 10,000 மற்றும் ரூ. 5,000 ரொக்கம், சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் அளிக்கப்படும். இந்தப் போட்டி தொடர்பான விபரங்களுக்கு 9842272650, 7421419568, 8903751640, 9894300104 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 

Newsletter