தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டிக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி தகுதி

கோவை : தென்மண்டல அளவிலான போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டிக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி தகுதி பெற்றுள்ளது.

கோவை : à®¤à¯†à®©à¯à®®à®£à¯à®Ÿà®² அளவிலான போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டிக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி தகுதி பெற்றுள்ளது. 

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கடந்த 22-ம் தேதியில் இருந்து 25-ம் தேதி வரையில் தென்மண்டல அளவிலான பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. தமிழகம் சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் மற்றும் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்கள் அடங்கிய பாரதியார் பல்கலைக்கழகம் அணி பங்கேற்றது.



இந்தப் போட்டித் தொடரின் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட பாரதியால் பல்கலைக்கழகம் அணி 2-ம் இடம் பிடித்து அசத்தியது. இதன்மூலம், தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டிக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி தகுதி பெற்றுள்ளது. 

"முதல்முறையாக பாரதியார் பல்கலைக்கழகம் அணி தென்மண்டல அளவிலான போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம், தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற முடிந்தது," என்கிறார் அணியின் பயிற்சியாளர் ரமேஷ்.

Newsletter