மாவட்ட அளவில் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையிலான சீனியர் தடகள போட்டிகள் தொடக்கம்

கோவை : சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான 41-வது உள்மாவட்ட சீனியர் தடகள போட்டி நேற்று தொடங்கியது.

கோவை : சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான 41-வது உள்மாவட்ட சீனியர் தடகள போட்டி நேற்று தொடங்கியது. 

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 60 சி.பி.எஸ்.இ பள்ளிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 14, 16 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கென 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 



முதல்நாளில், சுமார் 36-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கும், தனிநபர் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களுக்கும் சுழற்கோப்பை மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.



ஆண்கள் பிரிவில், மோகன் குமாரவேல், ரிஷி வர்மா, பரத் குமார், வினய் விக்ராந்த், சர்வேஷ் எஸ்.டி, தேவ் ஆனந்த், லலித் குமார், லோகுபிரசாத், ஹரி கார்த்திக், அஷ்வின், சபரி, ப்ரேனேஷ், பிரபோத் சதிஷ், ரோகன் பி மகேந்திரா ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.



பெண்கள் பிரிவில், கோபிகா, விதர்ஷினி, ரிதன்யா ஶ்ரீ, சிநேகா, குரு அக்‌ஷ்யா, ஸ்வேதா, அத்மிகா, வித்யா, சங்கமி, சுபிகா, டாஃப்னி செல் சுரேஷ், ஐஸ்வர்யா, அவந்திகா, பிரகல்யாஶ்ரீ ஆகியோர் வென்றனர்.



Newsletter