பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி : சச்சிதானந்த ஜோதி மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி

கோவை : 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் இன்டர்நேசனல் பள்ளி மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

கோவை : 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் இன்டர்நேசனல் பள்ளி மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. 

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான 'கோவை ரோட்டரி கிளப்பின் மெட்ரோபொலிஷ் கோப்பை' கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 



ஸ்ரீ சக்தி கல்லூரியில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி அணிகளும் மோதின. முதலில் பேட் செய்த ராமகிருஷ்ணா பள்ளி அணி 25 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணி 22.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

இதேபோல, சச்சிதானந்த ஜோதி நிகேதன் இன்டர்நேசனல் பள்ளி அணி பி.எஸ்.பி.பி. அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

Newsletter