பி.எஸ்.ஜி கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி : எம். எஸ். பி. சோலை நாடார் பள்ளி உட்பட 4 அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி

கோவை : பி.எஸ்.ஜி. கோப்பைக்கான 44-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

கோவை : பி.எஸ்.ஜி. கோப்பைக்கான 44-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

கோவையில் நடைபெறும் இந்த கூடைப்பந்து போட்டியினை பி.எஸ்.ஜி சர்வஜனா மேல்நிலைப்பள்ளியின் பொது செயலர் நாரயணசுவாமி தொடங்கி வைத்தார். 

இப்போட்டிகளில் தேனீ, தஞ்சாவூர், சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 19 அணிகள் பங்கேற்றுள்ளன. இவ்வணிகளுக்கிடையே ரவுண்ட் ராபின் முறைப்படி போட்டிகள் நடைபெற்றன. 



லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளை வென்ற கோவையைச் சேர்ந்த பி.எஸ்.ஜி மேல்நிலைப்பள்ளி, ஶ்ரீ மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் எம். எஸ். பி. சோலை நாடார் பள்ளி, தஞ்சாவூர் கமல சுப்ரமணியன் பள்ளி ஆகியவை அடுத்த கட்ட போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளன. 

மேலும், இறுதியில் வெற்றி வாய்ப்பைப் பெறும் அணிக்கு பி.எஸ்.ஜி நிறுவனத்தின் இயக்குனர் கோபலகிருஷ்ணன் ரூ.20 ஆயிரம் பரித்தொகையை வழங்குவார்.

Newsletter