2-வது டிவிசன் கிரிக்கெட் போட்டி : பரணிகுமாரின் அபார பந்து வீச்சால் ரெயின்போ அணி வெற்றி

கோவை : 2-வது டிவிசன் கிரிக்கெட் போட்டித் தொடரில் பரணிகுமாரின் அபார பந்து வீச்சால் விஜய் சி.சி. அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் ரெயின்போ அணி வீழ்த்தியது.

கோவை : 2-வது டிவிசன் கிரிக்கெட் போட்டித் தொடரில் பரணிகுமாரின் அபார பந்து வீச்சால் விஜய் சி.சி. அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் ரெயின்போ அணி வீழ்த்தியது. 

கோவை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடந்த 2-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியின் ரெயின்போ 1972 சி.சி. அணியும், விஜய் சி.சி. அணியும் பலபரீட்சை நடத்தின. இதில், முதலில் பேட் செய்த ரெயின்போ அணி 33.3 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய விஜய் சி.சி., அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் பரணிகுமார் கடும் சவாலாக திகழ்ந்தார். 

இதனால், பேட்ஸ்மென்கள் வந்த வேகத்தில் பெவிலியின் திரும்பினர். இறுதியில், அந்த அணியால் 30.3 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம், 14 ரன்கள் வித்தியாசத்தில் ரெயின்போ அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக பரணிகுமார் வெறும் 23 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். 

இதேபோல, பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் நடந்த மற்றொரு போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் இடது கை சுழற்பந்து ஆர். அவுசிக் ஸ்ரீனிவாசின் அபார பந்து வீச்சால் (5/14) சூர்யபாலா அணி 60 ரன்களுக்கு சுருண்டது. எளிய இலக்கை நோக்கிய ஆடிய ராமகிருஷ்ணா அணியின் என். முகமது ஆஷிக் அதிகபட்சமாக 44 ரன்கள் குவித்து 13 ஓவர்களில் அணியை வெற்றி பெறச் செய்தார். 

Newsletter