மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆர்வத்துடன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

கோவை : மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கோவை : மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

கோவை மாவட்டத்தின் 2-ம் பதிப்பாகவும், கிளப்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி மாவட்ட பயிற்சியாளர்கள் மற்றும் அகாடமிகளின் சார்பில் ஒய்.டி.டி.ஏ. பெடலர்ஸ் டேபிள் டென்னிஸ் அகாடமியில் நேற்று நடைபெற்றது. இதில், கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மினி கேடட், கேடட், சப்-ஜுனியர், ஜுனியர் என இருபாலாருக்கும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. 

இதில், சம்யுதா, சாய் நிதிஷ், தமிழ் இலக்கியா, சொக்கலிங்கம், ஜெஸ்மிதா, ஆதார்ஷ், ஸ்ரீ நிவி, நரேஷ், நரேஷ், தீபக் கிருஷ்ணா மற்றும் சங்கர் உள்ளிட்டோர் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றனர். 

Newsletter