கோத்தகிரியில் கடும் பனியிலும் நடந்த கால்பந்தாட்டப் போட்டியில் ஹில்போர்ட் அணி சாம்பியன்

நீலகிரி : கோத்தகிரியில் சத்தியகாத்தி பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி மைதானத்தில் நடந்த 3-ம் ஆண்டு கால்பந்து போட்டியில், ஹில்போர்ட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

நீலகிரி : கோத்தகிரியில் சத்தியகாத்தி பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி மைதானத்தில் நடந்த 3-ம் ஆண்டு கால்பந்து போட்டியில், ஹில்போர்ட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

2 நாட்கள் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்ற இப்போட்டிகள், பத்து வயதுக்குட்பட்டோர் மற்றும் 14 வயதுக்குட்பட்டோர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில், நீலகிரி மாவட்டம் முழுவதிலும் இருந்து 26 தனியார் மற்றும் அரசு பள்ளி அணிகள் கலந்து கொண்டன. கடும் பனியிலும், இரவு நேரத்தில் மின்னொளியில் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றது. இறுதி போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உதகை ஏகலைவா அரசு பள்ளி அணியை, கோத்தகிரி ஹில்போர்ட் அணி வென்றது. பத்து வயதுக்குட்பட்டோர் பிரிவில் விஷ்வசாந்தி பள்ளி அணியை, சத்தியகாத்தி பள்ளி அணி வீழ்த்தியது.



வெற்றி பெற்ற ஹில்போர்ட் பள்ளிக்கு ரூ. 25,000 ரொக்கமும், சத்தியகாத்தி பள்ளிக்கு இரண்டாவது பரிசாக ரூ. 10,000 மற்றும் சத்தியகாத்தி சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்க துணை கவர்னர் டாக்டர் ரவிக்குமார், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுளை வழங்கினர்.



Newsletter