பி.எஸ்.ஜி கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி : கோப்பையை வென்றது கமலா சுப்ரமணியம் பள்ளி

கோவை : பி.எஸ்.ஜி சர்வஜனா பள்ளியில் ஞாயிறன்று நடைபெற்ற 44-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கமலா சுப்ரமணியன் பள்ளி பி.எஸ்.ஜி கோப்பை வென்றுள்ளது.

கோவை : பி.எஸ்.ஜி சர்வஜனா பள்ளியில் ஞாயிறன்று நடைபெற்ற 44-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கமலா சுப்ரமணியன் பள்ளி பி.எஸ்.ஜி கோப்பை வென்றுள்ளது.

இப்போட்டிகளில் தேனீ, தஞ்சாவூர், சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 19 அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெற்ற இப்போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெற்றன.



எம். எஸ். பி. சோலை நாடார் பள்ளி, தஞ்சாவூர் கமலா சுப்ரமணியன் பள்ளி ஆகிய இருஅணிகளும் இறுதிச்சுற்றில் மோதிக் கொண்டன. அதில் அபாரமாக புள்ளிகளைக் குவித்து கமலா சுப்ரமணியன் பள்ளி அணி வெற்றி வாய்ப்பைத் தட்டிச் சென்றது. 2-வது இடத்தை எம். எஸ். பி. சோலை நாடார் பள்ளி அணியும், 3-வது இடத்தை பி.எஸ்.ஜி சர்வஜனா பள்ளி அணியும் பிடித்தது.



வெற்றி பெற்ற அணிகளுக்கு பி.எஸ்.ஜி சர்வஜனா மேல்நிலைப்பள்ளியின் பொது செயலர் நாரயணசுவாமி பரிசுத்தொகை ரூ.25 ஆயிரத்தை வழங்கினார். சிறப்பாக ஆடிய கமலா சுப்ரமணியன் பள்ளி அணி, லாவன் சிறந்த ஆட்டக்காரர் விருதினைப் பெற்றார்.



Newsletter