தேசிய அளவில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் கோவை மாணவி தங்கம் வென்றார்

கோவை : தேசிய அளவில் நடைபெற்ற கிராமப்புற விளையாட்டு போட்டியில் வில்வித்தைப் பிரிவில் கோவையைச் சேர்ந்த டீனா துர்கா தங்கம் வென்றார்.

கோவை : தேசிய அளவில் நடைபெற்ற கிராமப்புற விளையாட்டு போட்டியில் வில்வித்தைப் பிரிவில் கோவையைச் சேர்ந்த டீனா துர்கா தங்கம் வென்றார்.

பாண்டிச்சேரியில் கடந்த நவம்பர் 30 -ம் தேதி முதல் டிசம்பர் 2 -ம் தேதி வரையிலும் 8 -வது தேசிய கிராமப்புற போட்டி நடைபெற்றது. யுனிவர்சல் அகடாமியில் நடைபெற்ற இப்போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 700 வில் வித்தை வீரர்கள் பங்கேற்றனர். அதில் சிறப்பாக விளையாடி கோவையை சேர்ந்த வி. டீனா துர்கா தங்கம் வென்றுள்ளார்.


19 வயதிற்குற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற டீனா பேசுகையில், "முதல் முறையாகத் தேசிய அளவில் பதக்கம் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வில்வித்தையில் வெற்றி பெறுவது என்னுடைய கனவு. அதிலும் முதல் முயற்சியிலே சாத்தியமானது மறக்கவே முடியாதது," என்றார்.

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் 2- ம் ஆண்டு பி.ஏ. பொருளாதாரம் பயிலும் டீனா தடகள வீராங்கணை என்பது குறிப்பிடத்தக்க

Newsletter