கோவையில் கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி: ஹிந்துஸ்தான் கல்லூரி அணி சாம்பியன்

கோவை : பாரதியார் பல்கலைக்கு கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் ஹிந்துஸ்தான் கல்லூரி வெற்றி வாய்ப்பைத் தட்டிச் சென்றது.

கோவை : பாரதியார் பல்கலைக்கு கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் ஹிந்துஸ்தான் கல்லூரி வெற்றி வாய்ப்பைத் தட்டிச் சென்றது. 

பாரதியார் பல்கலைகழத்தின் கீழ் இணைந்துள்ள 34 கல்லூரிகளுக்கிடையே கைப்பந்து போட்டிகள் நேற்று நடைபெற்றது. நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இந்நிகழ்விற்கு நேரு கல்வி குழுமத்தின் செயலர் கிருஷ்ணகுமார் தலைமையேற்றார்.

இப்போட்டியின் இறுதிக் கட்டத்தில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதிக் கொண்டன. அதில், 5 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹிந்துஸ்தான் கல்லூரி அணி வென்றது.

மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில், பாரதியார் பல்கலை அணியும், ஶ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா அணியும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடியன. அந்த ஆட்டத்தில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் பாரதியார் பல்கலை 3 -வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. 

வெற்றி பெற்ற அணிகளுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அன்பழகன் பரிசுகளை வழங்கினார்.

Newsletter