கோவையில் 24 -வது தமிழ்நாடு வனத்துறை விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

கோவை : கோவையில் 24 -வது தமிழ்நாடு வனத்துறை விளையாட்டு போட்டிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஶ்ரீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை : கோவையில் 24 -வது தமிழ்நாடு வனத்துறை விளையாட்டு போட்டிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஶ்ரீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார். 

கோவை வனக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு வருடமும் பிரத்யேயமாக வனத்துறை அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த வருடத்திற்கான 24 -வது தமிழ்நாடு வனத்துறை விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. 



இப்போட்டிக்கான தொடக்க விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஶ்ரீனிவாசன் மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், தமிழ்நாட்டில் உள்ள 13 வன பிரிவு மண்டலங்களில் இருந்து 701 வன அதிகாரிகள் வந்து, அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 



கோலாகலமாக இன்று தொடங்கிய இப்போட்டியானது வரும் ஞாயிறு வரை நடைபெறும். இதில் 13 வனப்பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். வாலி பால், கபடி, கிரிக்கெட், நீச்சல், பளு தூக்குதல், துப்பாக்கு சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. 

சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற போகும் வீரர்கள் ராய்பூரில் நடைபெறவிருக்கும் அனைத்திந்திய வன விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை பெறுவர். இந்தப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் திறமைசாலிகளுக்கு பரிசாக ரொக்கத் தொகை வழங்கப்பட இருக்கிறது. 



குறிப்பாக, தங்கம் வெல்லும் விளையாட்டு வீரருக்கு ரூ.20 ஆயிரம், வெள்ளி வெல்வோருக்கு ரூ.15 ஆயிரம், வெண்கலம் வெல்வோருக்கு ரூ.10 ஆயிரம் என பரிசுத்தொகை போட்டிகளின் நிறைவு விழாவில் வழங்கப்படும். 

Newsletter