கோவையில் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி : பி.எஸ்.ஜி கல்லூரி சாம்பியன்

கோவை : எஸ்.ஆர்.கே.வி மருதி கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் பி.எஸ்.ஜி கல்லூரி கோப்பையை தட்டி சாதனைப் படைத்தது.

கோவை : எஸ்.ஆர்.கே.வி மருதி கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் பி.எஸ்.ஜி கல்லூரி கோப்பையை தட்டி சாதனைப் படைத்தது. 

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகளின் 125-வது நினைவு ஆண்டை முன்னிட்டு, தமிழ்நாட்டு அளவில் முதல் முறையாகப் பளு தூக்கும் போட்டிகள் தொடங்கப்பட்டது. இப்போட்டியில் 30 கல்லூரிகளிலிருந்து திறமையான 120 பளு தூக்கு வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் திறமைக்கும், வலிமைக்கும் ஏற்றவாறு 53, 59, 66, 74, 83, 93, 105, 120 மற்றும் 120 -க்கும் அதிகமான கிலோக்களின், எடைப் பிரிவுகளில் போட்டிகள் பிரிக்கப்பட்டிருந்தது. 

இதில் பி.எஸ்.ஜி கல்லூரி அணி 60 புள்ளிகளைப் பெற்றதோடு 5 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்று முன்னிலை வகித்தது. இதையடுத்து, நாமக்கலைச் சேர்ந்த பாவை பொறியியல் கல்லூரி அணி 53 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மேலும், இப்போட்டியில் வலிமையான மனிதனுக்கான விருதினை பி.எஸ்.ஜி. கல்லூரியைச் சேர்ந்த ஶ்ரீ அறிவழகன் மற்றும் வி.சாஜித் பெற்றனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மேற்கு ரயில்வே துறையின் தலைமை பொறியாளர் எம்.காளிமுத்து வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளையும், சாம்பியன் பரிசுகளையும் வழங்கினார்.

Newsletter