பார்மஸி கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டி : 3 -வது முறையாக பி.எஸ்.ஜி அணி சாம்பியன்

கோவை : திருச்சி பெரியார் பார்மஸி கல்லூரியில் நடைபெற்ற பார்மஸி கல்லூரிகளுக்கிடையான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளில் 3 -வது முறையாக பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரி சாம்பியன்ஷிப் வென்றது.


கோவை : திருச்சி பெரியார் பார்மஸி கல்லூரியில் நடைபெற்ற பார்மஸி கல்லூரிகளுக்கிடையான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளில் 3 -வது முறையாக பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரி சாம்பியன்ஷிப் வென்றது. 

தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் பார்மஸி கல்லூரிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் திருச்சி பெரியார் கல்லூரியில் கடந்த டிசம்பர் 13 முதல் 15 -ம் தேதி வரை நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதுமுள்ள 21 பார்மஸி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.



இதில், கோவை பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரியின் சார்பில் விளையாடிய அணியினர் எரிபந்து, தடகளம், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று அபாரமாக விளையாடினர். அதில் மொத்தம் 43 புள்ளிகளுடன் முன்னணி பெற்று பல பரிசுகளை பெற்றதுடன் சாம்பியன்சிப் பட்டத்தையும் வென்றனர்.

இந்த வெற்றியை சிறப்பிக்கும் வகையில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி மாணவர்களுக்குப் பரிசு கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார். இந்த சாம்பியன்சிப் பட்டத்தை பி.எஸ்.ஜி கல்லூரி மூன்றாவது முறையாக வென்றது குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

Newsletter