உலகளவில் குத்துச்சண்டை சாம்பியனாக கேட்ரிங் தொழிலில் ஈடுபடும் கோவை இளைஞர்

கோவை : உலகளவில் குத்துச்சண்டையில் சாம்பியன் ஆக போராடும் இளைஞர் போட்டியின் பயண செலவுகளை ஈடுகட்ட உணவு பரிமாறும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

கோவை : உலகளவில் குத்துச்சண்டையில் சாம்பியன் ஆக போராடும் இளைஞர் போட்டியின் பயண செலவுகளை ஈடுகட்ட உணவு பரிமாறும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

கோவையைச் சேர்ந்த இளைஞர் எம். ரஞ்சித் குமார். இவர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார். குத்துச் சண்டையில் சிறந்து விளங்கும் ரஞ்சித் சில பதக்கங்களையும் தன் திறமையால் கைவசப்படுத்தியுள்ளார். குறிப்பிடும் அளவில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் சுமார் 5 பதக்கங்களை வென்றுள்ளார்.



நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஒரு கோடைக்கால முகாமில் எதிர்பாராத விதமாகக் கலந்து கொண்ட ரஞ்சித், அன்று தான் விளையாட்டுத் துறைக்கு அடியெடுத்து வைத்தார். அந்த சமயத்தில் அவர் பள்ளி பொதுத்தேர்வுகளுக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்ததால் அவரால் விளையாட்டுப் போட்டியில் மேற்கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்க இயலாமல் போனது. 

ஆனால், தற்போது பயிற்சி பெற்று வரும் ரஞ்சித் கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், கொல்கத்தாவில் தேசிய அளவில் சீனியர் பிரிவு குத்துச் சண்டை வீரர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்று அபார சாதனைப் படைத்துள்ளார். இதற்கிடையில், கும்பூ மற்றும் முய் தாய் குத்து சண்டைப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.

இது குறித்து ரஞ்சித் கூறுகையில், "தினமும் பயிற்சிக்காகவே நான் காலையில் இரண்டு à®®/ணி நேரத்தை ஒதுக்கி விடுவேன். மேலும், உடற்பயிற்சிக்கென 3 மணி நேரம் உடற்பயிற்சி கூடத்தில் செலவிடுவேன். ஒரு நாளுக்கு ஐந்து à®®/னி நேரம் பயிற்சி எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளேன். மேலும், என்னுடைய பயிற்சி மையத்திற்கு செல்ல நான் 30 கி.மீ பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. 

சர்வதேச அளவில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளரான பிரேம் நடத்தும் குனியமுத்தூரில் அமைந்துள்ள பிரேம் எம்.எம்.ஏ அகாடமியில் தான் நான் பயிற்சி எடுத்து வருகிறேன்," என்றார்.

குத்துச்சண்டையில் சிறந்து விளங்கும் ரஞ்சித் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எனவே, அவருடைய பொருதார நிலை மேற்கொண்டு அவரின் வெற்றிப் பாதையில் தடையாகிக் கொண்டிருக்கிறது. அதனை போக்கவே ரஞ்சித் உணவு பரிமாறும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அதில் வரும் வருமானத்தினைக் கொண்டு அடுத்த மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார்.

சர்வதேச அளவில் குத்து சண்டை வீரராக முயன்று கொண்டிருக்கும் ரஞ்சித் திறமையில் முன்னிலை வகித்த போதும், பொருளாதார அளவில் பின் தங்கியுள்ளார். எனவே, மாநில அரசு அவரது வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதே தற்போது ரஞ்சித்தின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter