தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில் ரெத்தின் பிரனவ், பிரியதர்ஷினி சாம்பியன்

கோவை : தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில் ரெத்தின் பிரனவ், பிரியதர்ஷினி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

கோவை : தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில் ரெத்தின் பிரனவ், பிரியதர்ஷினி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். 

கே.ஜி. ரமேஷ் டென்னிஸ் அகாடமி சார்பில் 12 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 16 வயதுடையவர்களுக்கான டென்னிஸ் போட்டி கோவையில் நடத்தப்பட்டது. தொடர்ந்து 6 நாட்கள் நடந்த இந்தப் போட்டித் தொடரில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

 

கடைசி நாளான இன்று நடந்த 12 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டென்னிஸ் போட்டியில், கார்த்திகாவை (6-2, 6-1) என்ற செட் கணக்கில் விஷ்ரூத் வீழ்த்தினார். 16 வயதுடைய மகளிர் பிரிவில் எம். பிரியதர்ஷினி (6-3, 4-6, 6-2) என்ற செட் கணக்கில் ஜோதிகாவை தோற்கடித்து மகுடம் சூடினார். 

இதேபோல, ஆண்கள் பிரிவில் 12 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் அக்ஷித் பாலசுப்ரமணியன் (6-1, 6-3) என்ற நேர் செட் கணக்கில் சிவபிரசாந்தையும் தோற்கடித்து சாம்பியனானார். 16 வயதுடையவர்கள் பிரிவில் ரெத்தின் பிரனவ் (6-3, 6-4) என்ற நேர் செட் கணக்கில் விஷ்வசேனனை வீழ்த்தி கோப்பையை வென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு கோவை அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம் மற்றும் கே.ஜி.ஆர். டென்னிஸ் அகாடமி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.



இது குறித்து அகாடமியின் இயக்குநர் கூறுகையில், "இந்த முறை நடந்த டென்னிஸ் போட்டித் தொடரில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தவும், அவர்கள் அடுத்தகட்டத்திற்கு செல்வதற்காகவும் அடித்தளமாக இந்தத் தொடர் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது," இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter