தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற கோவையைச் சேர்ந்த முதல் வீராங்கனை

கோவை : விசாகப்பட்டினத்தில் நடந்த 56-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த அபிநயா வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.


கோவை : விசாகப்பட்டினத்தில் நடந்த 56-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த அபிநயா பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.



விசாகப்பட்டினத்தில் கடந்த 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 56-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், கோவையைச் சேர்ந்த நேஷனல் மாடல் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி அபிநயா ரகுபதி 16 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் குவார்டு டெர்பி போட்டியில் கலந்து கொண்டார். இதில், சிறப்பாக செயல்பட்ட அவர் வெண்கலம் வென்று அசத்தினார். இதன்மூலம், 25 ஆண்டுகள் சாதனையை முறியடித்து, ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற கோவையைச் சேர்ந்த முதல் வீராங்கனை பெருமையையும் அவர் பெற்றார். 



5-ம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் நிகழ்த்தப்பட்ட ஸ்கேட்டிங் பயிற்சியைக் கண்ட அவர், அதன் மீது ஆர்வம் அதீத ஆர்வம் கொண்டார். இதனால், நன்கு பயிற்சி பெற்று, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட அபிநயா பல்வேறு பதக்கங்களைக் குவித்துள்ளார். 



பதக்கம் வென்றது குறித்து சிம்ப்ளிசிட்டியிடம் அபிநயா கூறியதாவது :- கடந்த 6 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று வருகிறேன். இதுவரை மாவட்ட அளவிலான போட்டிகளில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். மேலும், மாநில அளவில் 6 முறை பதக்கம் வென்றுள்ளேன். நாள்தோறும் 3 மணி நேரம் பயிற்சிக்காக ஒதுக்குகிறேன். கல்வியையும், விளையாட்டையும் சமமாகக் கொண்டு செல்கிறேன்," இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter