ஜுனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கோப்பை கிரிக்கெட் போட்டி : ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா சாம்பியன்

கோவை : பள்ளிகளுக்கு இடையிலான ஜுனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : பள்ளிகளுக்கு இடையிலான ஜுனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

5-வது ஜுனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கோப்பை கிரிக்கெட் போட் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி அணி மற்றும் ஆர்.கே.எஸ். கல்வி நிலையம் பள்ளி அணியும் பலபரீட்சை நடத்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஜெயந்திர அணி, என்.டி.ஹரி சங்கரின் அபார ஆட்டத்தால் (94(63)) 20 ஓவர்கள் முடிவில் வெறும் ஒரு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. 



கடின இலக்கை நோக்கி ஆடிய ஆர்.கே.எஸ். கல்வி நிலையம் அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் வெறும் 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெயந்திர அணியின் பி.நிர்மல் குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 



இத்தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா அணியின் பி.சச்சினும், சிறந்த பந்துவீச்சாளராக மணி உயர்நிலைப் பள்ளியின் ஆர்.வினோத்தும் தேர்வு செய்யப்பட்டனர். 

 



ஜுனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள், திருநெல்வேலியில் நடக்கும் 64 அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter