மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவன் 3-வது இடம்

கோவை : மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவன் 3-வது இடம் பிடித்துள்ளார்.

கோவை : மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவன் 3-வது இடம் பிடித்துள்ளார். 

கோவை மாவட்ட கராத்தே அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமையை வெளிக்காட்டினர். கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர் எஸ்.கெளதம், மூன்றாம் இடத்தினை பெற்றார். அவருக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. 

இந்த மாணவரை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி, முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், முதல்வர் ஜே.ஜேனட், விளையாட்டுத்துறை இயக்குநர் சுரேஷ்குமார், துறைத்தலைவர் சோபியா மற்றும் பேராசிரியர்கள் பலர் பாராட்டினார். 

Newsletter