மின்னல் கோப்பையைக் கைப்பற்றிய பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி

கோவை : மாநில அளவிலான 21-வது கூடைப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி. கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : மாநில அளவிலான 21-வது கூடைப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி. கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

மின்னல் அரிமா கிளப் மற்றும் சந்தானலட்சுமி கூடைப்பந்து கிளப் இணைந்து 21-வது மாநில அளவிலான மின்னல் கோப்பை கூடைப்பந்து போட்டியை நடத்தியது. பொள்ளாச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடந்த இந்தப் போட்டியில், கோவை, தஞ்சை, கரூர், சேலம் மற்றும் மதுரையைச் சேர்ந்த சிறந்த 6 அணிகள் கலந்து கொண்டன. 

இந்த நிலையில், பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு போலீஸ் அணியை வீழ்த்தி கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் 57-53 என்ற கணக்கில், வெறும் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் பி.எஸ்.ஜி. அணி மின்னல் கோப்பையைக் கைப்பற்றியது.

Newsletter