19 வயதிற்குட்பட்டோருக்கான கபடி போட்டி : நரேன் ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன்

கோவை : காரமடை அருகே உள்ள ஆர்.வி. கல்லூரியில் நடந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான கபடி போட்டியில் நரேன் ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : à®•ாரமடை அருகே உள்ள ஆர்.வி. கல்லூரியில் நடந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான கபடி போட்டியில் நரேன் ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன் பட்டம் வென்றது.



ஆர்.வி. கலை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு நிர்வாக இயக்குநர் வி.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். சுந்தர் 19 வயதிற்குட்பட்டோருக்கான கபடி போட்டியை தொடங்கி வைத்தார். சுமார், 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில், சிறப்பாக விளையாடிய தோலம்பாளையத்தைச் சேர்ந்த நரேன் ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு ரூ.4,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 



2-வது இடம் பிடித்த தோலம்பாளைய சத்யவீரன் அணிக்கு கோப்பையும், ரூ.3,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. 3-வது இடம் பிடித்த எஸ்.ஆர்.கே.வி. அணிக்கு ரூ.2,000மும், 4-வது இடம் பிடித்த பெரியநாயக்கன் பாளையம் அணிக்கு ரூ.1,000மும் ரொக்கப் பரிசாக அளிக்கப்பட்டது.

நரேன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் என். ஜெயபிரபாகரன் சிறந்த டிஃப்பன்ஸ் வீரராகவும், சத்யவீரன் அணியின் எஸ். பூபதி சிறந்த அஃப்பன்ஸ் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

Newsletter