கோவையில் டி20 கிரிக்கெட் தொடரில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சாம்பியன்

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ், இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணியும் பலபரீட்சை நடத்தின. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இ.ஏ.பி. அணி 19.1 ஓவர்கள் முடிவில் 90 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஏ.வி. அபிலாஷ் 41 ரன்கள் சேர்த்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் அணி சார்பில் ஹரிநிஷாந்த் 3 (18) விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

எளிய இலக்கை நோக்கி ஆடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் அணி, எம்.படேலின் (30 ரன்கள்) உதவியால், 14.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை எடுத்து எளிதில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. 

இதைத் தொடர்ந்து, 3-வது இடத்திற்கான போட்டியில், காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி, ராஜசேகர் மணி எம்.சி.சி. அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

வெற்றி பெற்ற அணிக்கு கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் டி. லட்சுமிநாராயணசாமி மற்றும் கோவை நைட்ஸின் ஆர். சந்திரமவுலி ஆகியோர் கோப்பையை வழங்கிக் கவுரவித்தனர். மேலும், வெற்றி பெற்ற அணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் வரையிலான பரிசுகள் வழங்கப்பட்டது. இத்தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக இ.ஏ.பி. அணியின் ஏ.வி. அபிலாஷும், சிறந்த பந்துவீச்சாளராக ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் அணியைச் சேர்ந்த எம். அபிநவ்வும் தேர்வு செய்யப்பட்டனர். 

Newsletter