கோவையில் நடந்த மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை : கோவையில் நடந்த மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கோவை : கோவையில் நடந்த மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 



பிளாஸ்டிக் இல்லா சுற்றுச்சூழலை உருவாக்குதல் மற்றும் சைக்கிளிங்கில் குழந்தைகளை ஈடுபடுத்திக் கொள்ளுதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் எம்.டி.பி. சேலஞ்ச் மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயம் நடந்தது. இதில், 10 வயது முதல் 35 வயது வரையிலான ஆண், பெண் என இருபாலாருக்கும், பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. 



10-14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஆலென் ரோவன் முதல் பரிசும், ஹர்சித் 2-வது பரிசையும் பிடித்தனர். 14-16 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கோகுல் கிருஷ்ணன் மற்றும் டேனியல் ஆகியோர் முதலிரண்டு இடங்களை பிடித்தனர். இதேபோல, 16 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், ஸ்ரீஜித், சரத் ஆகியோர் முதலிரண்டு இடங்களை பிடித்தனர். 



பெண்களுக்கான மேற்கண்ட பிரிவுகளில் பூஜா ஸ்வேதா, தன்யா, சஞ்சனா, ஹாசினி, ஸ்ருதி, மோனிஷா, ஜோதி, பிரேமலதா ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். கோவை மாவட்ட சைக்கிளிங் சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி இந்தப் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். 

Newsletter