மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி : பரிசுகளை வென்றது கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி

கோவை : மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 2 மற்றும் 3 -வது இடங்களைப் பிடித்தனர்.

கோவை : மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 2 மற்றும் 3 -வது இடங்களைப் பிடித்தனர்.

தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் மற்றும் மாருதி உடற்கல்வி கல்லூரி இணைந்து சமீபத்தில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையே பளு தூக்கும் போட்டியை நடத்தியது. பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மாருதி கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த போட்டியில், 83 கிலோ எடை தூக்கும் பிரிவில் சிறப்பாக விளையாடி கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் பரிசுகளை தட்டினர். இரண்டாம் பரிசினை இளங்கலை பி.எஸ்.சி மென்பொருள் அமைப்பு பிரிவில் 3 -ம் ஆண்டு பயிலும் ரூபன் பெற்றார். 3 -ம் இடத்தினை பி.காம் வணிகவியல் பிரிவில் 3 -ம் ஆண்டு பயிலும் மாணவர் கார்த்திக் பெற்றார். 

இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களை இக்கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன், முதல்வர் பி.பேபி ஷகிலா, விளையாட்டுத்துறை இயக்குனர்கள் குமரேசன், அம்பிகா, துறைத்தலைவர்கள், சுனிதா, அன்புமலர், மற்றும் பலர் பாராட்டினார்கள். 

Newsletter