2 -வது சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி : 16 பதக்கங்களுடன் கோவை அணி சாம்பியன்ஷிப் வென்றது

கோவை : கோவை மாவட்டத்தின் இளம் ஸ்கேட்டிங் வீரர்கள் சர்வதேச அளவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் 16 பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றினர்.

கோவை : கோவை மாவட்டத்தின் இளம் ஸ்கேட்டிங் வீரர்கள் சர்வதேச அளவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் 16 பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றினர். 

இந்திய ஸ்பீடு ஸ்கேட்டிங் கூட்டமைப்பு சார்பில் 2-வது சர்வதேச ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், கோவை மாவட்ட அணி 5 தங்கப்பதக்கங்கள் உட்பட 16 பதக்கங்களை வென்றது. 



தமிழகத்தில் இருந்து சதீஷ் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமியை சேர்ந்த சிறந்த 13 ஸ்கேட்டிங் வீரர்கள் இந்த சர்வதேச போட்டியில் கலந்து கொண்டனர். அதில் 5 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் முறையே 16 பதக்கங்களைத் தட்டி சாம்பியன்ஷிப்பை வென்றனர். 

சர்வதேச அளவில் நடைபெற்ற இப்போட்டியில், உலகமெங்கும் இருந்து 1200 பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர். மேலும், 1000 மீ ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற அவர்கள் அனைவரும் 8 முதல் 10 வயதிற்குட்பட்டோருக்கான மற்றும் 10 முதல் 12 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர்.

மேலும், இப்போட்டியில் சிறப்பாக விளையாடி ரக்சன் 1 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்துள்ளார். ஹரிஷ், நிர்மல், குருதாஸ், திராஜ் ஆகிய நால்வரும் தங்கம் வென்றுள்ளனர். வெள்ளிப்பதக்கங்களை அபினவ், முருகன், லோகதீபன் ஆகியோர் வென்றுள்ளனர். கீர்த்தனா, சுஜித், பிரணவ், கணபதி, ராகுல் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter