சச்சின் டெண்டுல்கரின் இளம் வயது பயிற்சியாளர் அச்ரேக்கர் காலமானார்

மும்பை : கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் இளம் வயது பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கர் தனது 87-வது வயதில் இன்று காலமானார்.

மும்பை : கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் இளம் வயது பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கர் தனது 87-வது வயதில் இன்று காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் அரங்கில் 100 சதங்களை விளாசிய ஒரே நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான இவரது இளம் வயது பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கர் அனைவருக்கும் நன்கு தெரிந்தவரே. தனது இந்த அதீத வளர்ச்சிக்கு காரணமான அச்ரேக்கரை சச்சின் எந்த நேரத்திலும் குறிப்பிட மறந்ததில்லை. 

இந்த நிலையில், சச்சினின் ஆஸ்தான பயிற்சியாளராக திகழ்ந்த அச்ரேக்கர் மும்பையில் இன்று காலமானார். 87-வயதான இவர், நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சச்சின் டெண்டுல்கர் தவிர, அஜித் அகார்கர், சந்திரகாந்த் பண்டிட், வினோத் காம்ப்ளி, பிரவீன் அம்ரே ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். 

1932-ஆம் ஆண்டு பிறந்த அச்ரேக்கர், 1943-ஆம் ஆண்டு நியூ ஹிந்தி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாடத் தொடங்கினார். 1963-64 காலகட்டத்தில் ஒரேயொரு முதல்தர கிரிக்கெட் போட்டியில் மட்டும் அச்ரேக்கர் விளையாடியுள்ளார். சச்சினுக்கு பயிற்சியளித்ததற்காக மத்திய அரசின் துரோணாச்சாரியார் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter