யூத் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மனு பாகருக்கு ரூ. 2 கோடி பரிசு தொகை வழங்க ஹரியானா அரசு முடிவு

யூத் ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டு தங்கம் வென்ற இளம் துப்பாக்கி சூடும் வீராங்கனை மனு பாகருக்கு ரூ.2 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என அம்மாநில விளையாட்டு துறை அமைச்சர் அனில் விஜி உறுதியளித்துள்ளார்.


யூத் ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டு தங்கம் வென்ற இளம் துப்பாக்கி சூடும் வீராங்கனை மனு பாகருக்கு ரூ.2 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என அம்மாநில விளையாட்டு துறை அமைச்சர் அனில் விஜி உறுதியளித்துள்ளார். 

16 வயதே ஆன மனு பாகர் அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் ஏர்சிலில் கடந்த ஆண்டு நடந்த 'யூத்' ஒலிம்பிக் போட்டியில், முதல்முறையாக கலந்து கொண்டு பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாகர் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார். இதே போல குழு பிரிவிலும் தங்கம் வென்று அசத்தினார். மேலும், காமன்வெல்த் உள்ளிட்ட தொடர்களிலும் பதக்கங்களை குவித்தார். 

இதனிடையே, யூத் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் ஹரியானா வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில விளையாட்டு துறை அமைச்சர் அனில் விஜி டுவிட்டரில் அறிவித்திருந்தார். 

இதுவரையும் எந்தவித பரிசுத் தொகையும் வழங்காத நிலையில், பொறுமையை இழந்த வீராங்கனை மனு பாகர், அமைச்சரின் பதிவை சுட்டிக்காட்டி இது உண்மையா..? இல்லை வெறும் பேச்சுக்கா..?. மேலும், ஹரியானாவில் சிலர், விளையாட்டு வீரர்களின் பரிசு தொகையில் விளையாடுகின்றனர், எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், "விளையாட்டுத் துறையிடம் விசாரிக்காமல் இதுபோன்று மக்களிடம் பேசக் கூடாது. விளையாட்டு வீரர்களுக்கென நல்லொழுக்கம் அவசியம். முந்தைய அரசை விட தற்போதைய அரசு விளையாட்டு வீரர்களுக்கு பரிசு தொகையை அதிகரித்து வழங்குகிறது. தங்கம் வென்றவர்களுக்கு ரூ. 2 கோடி நிச்சயம் வழங்கப்படும்," இவ்வாறு டுவிட்டரில் அம்மாநில விளையாட்டு துறை அமைச்சர் அனில் விஜி குறிப்பிட்டிருந்தார்.

Newsletter