நீலகிரியில் காவல்துறையினர் நடத்திய கைப்பந்து போட்டியில் குமரன் காலனி அணி வெற்றி

நீலகிரி : பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட கைப்பந்து போட்டியில் குமரன் காலனி அணி வெற்றி பெற்றது.


நீலகிரி : பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட கைப்பந்து போட்டியில் குமரன் காலனி அணி வெற்றி பெற்றது.



கோத்தகிரியில் பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்த சோலூர்மட்டம் காவல்துறையினர் சார்பாக கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில், 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். பல்வேறு சுற்றுகளுக்கு பின்னர், இறுதிப்போட்டியில் குமரன் காலனி அணியும், காவல்துறை அணியும் மோதியது. இதில், குமரன் காலனி அணியினர் வெற்றி பெற்றனர். 



வெற்றி பெற்றவர்களுக்கு அப்பர்குன்னூர் ஆய்வாளர் ஜெயமுருகன் மற்றும் கோத்தகிரி உதவி ஆய்வாளர் நாகராஜ் பரிசுகளை வழங்கினர். இந்த போட்டி ஏற்பாடுகளை சோலூர்மட்டம் உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் காவல்துறையினர் செய்திருந்தனர்.



Newsletter