ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி சமன் : தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தியா

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி சமன் ஆனதைத் தொடர்ந்து, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.


சிட்னி : à®†à®¸à¯à®¤à®¿à®°à¯‡à®²à®¿à®¯à®¾à®µà¯à®•்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி சமன் ஆனதைத் தொடர்ந்து, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 622/7 ('டிக்ளேர்'), ஆஸ்திரேலியா 300 ரன்கள் எடுத்தன. ஆஸ்திரேலிய அணிக்கு 'பாலோ-ஆன்' வழங்கப்பட்டது. இதன்மூலம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாலோ-ஆன் பெற்று மோசமான நிலைக்கு ஆஸ்திரேலிய அணி தள்ளப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, 2-வது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி தொடங்கிய போது, மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால், நான்காம் நாள் முடிவில் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது. இன்றைய 5-ம் நாள் ஆட்டம் மழையால் முழுமையாக ரத்தானது.



இதனையடுத்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றி கோப்பையை வென்றது. அதோடு, ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய புதிய வரலாற்றை கோலி தலைமையிலான இந்திய அணி படைத்தது. இதற்கு முன், 11 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற இந்தியா, 8 முறை தொடரை இழந்தது. மூன்று முறை தொடரை 'டிரா' செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter