கோவையில் எம்.வி.எஸ் தேசிய சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு தொடக்கம்

கோவை : கோவையில் வரும் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள எம்.வி.எஸ் தேசிய சைக்கிள் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

கோவை : à®•ோவையில் வரும் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள எம்.வி.எஸ் தேசிய சைக்கிள் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 



கோவையில் 6 -ம் ஆண்டு தி எம்.வி.எஸ் கார்னிவெல் -2019 சைக்கிள் போட்டி பினாக்கிள் விளையாட்டு மற்றும் நல சங்கம் சார்பில் நடைபெறுகிறது. மேலும், எம்.வி.எஸ் கிரிட்டோரியம் தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்துடன் இணைந்து, கரி மோட்டார் ஸ்பீடு வேயில் நடத்துகிறது. 

பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த போட்டியை அம்பாள், ஆட்டோ டைட்டன், பெயின்ட்ஸ் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. இப்போட்டியில் தொழில்ரீதியானப் பந்தய வீரர்கள், சாதாரண ஆண்கள், பெண்கள், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், 55 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எனப் பலரும் பங்கேற்கலாம். 

மேலும், இந்தப் போட்டியில் உள்ளூர் போட்டியாளர்களுடன் வெளிநாட்டுப் போட்டியாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறும் பங்கேற்பாளர்களுக்கு பிப்ரவரி 3 -ம் தேதி கிரிட்டோரியம் டிராக்கிலும், மற்றும் பிப்ரவரி 2 -ம் தேதி அன்று என்டியூரா பார்ம் ஸ்டேஜிலும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். 

இந்தப் போட்டியில் முன்பதிவு செய்ய www.mvscyclingcarnival.com à®®à®±à¯à®±à¯à®®à¯ www.pinnaclesportsindia.net à®†à®•ிய இணையதளங்களை பார்க்கவும். இந்தப் போட்டிகளுக்கான முன்பதிவு ஜனவரி மாதம் 29 -ம் தேதி அன்று நிறைவடையும். 

Newsletter