கோவையில் ஆர்.ஹெச்.சி.எல் சீசன்-2 கிரிக்கெட் போட்டி : ஸ்டெப்ஸ் சோர்ஸிங் அணி சாம்பியன்

கோவை : கோவையில் நடத்தப்பட்ட ஆர்.ஹெச்.சி.எல் சீசன்-2 கிரிக்கெட் போட்டியில் ஸ்டெப்ஸ் சோர்ஸிங் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோவை : கோவையில் நடத்தப்பட்ட ஆர்.ஹெச்.சி.எல் சீசன்-2 கிரிக்கெட் போட்டியில் ஸ்டெப்ஸ் சோர்ஸிங் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

கோவை கிளப் நடத்தும் ஆர்.ஹெச்.சி.எல் சீசன் -2 கிரிக்கெட் போட்டி ஜனவரி மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அணிகள் கலந்து கொண்டன. 

இந்த போட்டியில்,  கிடைக்கும் நிதி அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர், அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் பராமரிப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை, இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. அதில் சிறப்பாக விளையாடி முதல் பரிசான ரூ.75 ஆயிரம் ரொக்கத் தொகையை ஸ்டெப் சோர்ஸிங் அணி வென்றது. 2 -ம் பரிசு ரூ.50 ஆயிரத்தை ஓஸ்லூம்ஸ் அணி பெற்றது. இதையடுத்து, 3 -ம் பரிசு ரூ.25 ஆயிரத்தை ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் பெற்றது. 4 -ம் பரிசு ரூ.15 ஆயிரத்தை சண்டே கிரிக்கெட் அகாடமி வென்றது. 

இந்த போட்டியில் சண்டே கிரிக்கெட் அகாடமியை சேர்ந்த ஆனந்த் சிறந்த பேட்ஸ் மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த பந்து வீச்சாளராக ஓஸ்லூம்ஸ் அணியை சேர்ந்த அருண் தேர்ந்தெடுக்கப்பட்டார். சண்டே கிரிக்கெட் அகாடமியை சேர்ந்த சசி சிறந்த ஆல் ரவுண்டராக தேர்வானார். ஆட்ட நாயகனாக ஸ்டெப் சோர்ஸிங் அணி பிரதாப் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். 

Newsletter