கோவையில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி தொடக்கம்

கோவை : சுகுணா பி.ஐ.பி. பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் கால்பந்தாட்ட போட்டி நேற்று தொடங்கியது.

கோவை : சுகுணா பி.ஐ.பி. பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் கால்பந்தாட்ட போட்டி நேற்று தொடங்கியது. 



சுகுணா பி.ஐ.பி. பள்ளி மற்றும் சென்னை சிட்டி கால்பந்து கிளப் இணைந்து நடத்தும் இந்த போட்டியினை சென்னை சிட்டி கிளப், சிவக்குமார் மற்றும் சுகுணா நிறுவனத்தின் இயக்குனர் லக்சுமி நாராயணன் தொடங்கி வைத்தனர். 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த போட்டியில் 70 அணிகள் பங்கேற்றுள்ளன. மேலும், இப்போட்டி 13 மற்றும் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான 2 பிரிவுகளின் கீழ் நடைபெறுகிறது. 

இதில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் சுகுணா பி.ஐ.பி. பள்ளி அணி 4 -க்கு 3 என்ற புள்ளி கணக்கில் சின்னமயா வித்யாலயா பள்ளி அணியினை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்டேன்ஸ் பள்ளி 1 -க்கு 0 என்ற புள்ளி கணக்கில் டெல்லி பப்ளிக் பள்ளியினை வீழ்த்து வெற்றியைக் கைப்பற்றியது. 



இதைப் போலவே நடைபெற்ற 13 -வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் டாப்ஸ் பப்ளிக் பள்ளி அணி 1 -க்கு 0 என்ற புள்ளி கணக்கில் வெங்கடேஷ்வரா பள்ளியை வீழ்த்தியது. மேலும், டெல்லி பப்ளிக் பள்ளி, விவேகம் சீனியர் பள்ளியை 0 -க்கு 2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. 

Newsletter