தேவராஜலூ நினைவுக் கோப்பை கூடைப்பந்து போட்டி : யுனைடெட் கிளப் அணி சாம்பியன்

கோவை : 13-வது தேவராஜுலூ நினைவுக் கோப்பை கூடைப்பந்து போட்டியில் யுனைடெட் கூடைப்பந்து கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : 13-வது தேவராஜுலூ நினைவுக் கோப்பை கூடைப்பந்து போட்டியில் யுனைடெட் கூடைப்பந்து கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான கூடைப்பந்து மைதானத்தில் தேவராஜுலூ நினைவுக் கோப்பை கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டித் தொடரில், கோவை மாநகரில் இருந்து 28 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளின் முடிவில், யுனைடெட் கூடைப்பந்து கிளப் அணியும், ஒய்.டபுள்யூ.சி.ஏ. கூடைப்பந்து கிளப் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் சமபலத்துடன் மோதின. இதனால், போட்டியின் முடிவில் 71-71 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலை வகித்தது. இதைத் தொடர்ந்து, வழங்கப்பட்ட கூடுதல் நிமிடங்களில் சிறப்பாக விளையாடிய யுனைடெட் கூடைப்பந்து கிளப் அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, யுனைடெட் கிளப் அணியின் செல்வா 23 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார். 



இதேபோல, 3-வது இடத்திற்கான போட்டியில் ஆர்.எல்.எம்.எச்.எஸ். அணியை 74-64 என்ற புள்ளிகள் கணக்கில் விங்ஸ் கூடைப்பந்து கிளப் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.9,000, ரூ.7,000, ரூ.5,000 மற்றும் ரூ. 4,000 பரிசுத் தொகையுடன் கோப்பையும் வழங்கப்பட்டது. 

Newsletter