கோத்தகிரியில் கால்பந்தாட்ட போட்டி வீரர்கள் தேர்வு போட்டி

நீலகிரி : சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டுப் போட்டியில் பின்தங்கியுள்ள இந்தியாவைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் 10 முதல் 15 வயதுள்ள இளம் வீரர்களைத் தேர்வு செய்ய நடைபெறும் கால்பந்தாட்ட போட்டிகள் கோத்தகிரியில் தொடங்கியது.

நீலகிரி : à®šà®°à¯à®µà®¤à¯‡à®š அளவில் கால்பந்து விளையாட்டுப் போட்டியில் பின்தங்கியுள்ள இந்தியாவைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் 10 முதல் 15 வயதுள்ள இளம் வீரர்களைத் தேர்வு செய்ய நடைபெறும் கால்பந்தாட்ட போட்டிகள் கோத்தகிரியில் தொடங்கியது. 



நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேசிய மனித மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் ப்ரமோஷன் பவுண்டேசன் என்ற புதிய அமைப்னை ஏற்படுத்தியுள்ளது. 



மத்திய விளையாட்டுத்துறை ஏற்படுத்தியுள்ள இந்த அமைப்பு சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டுப் போட்டியில் பின்தங்கியுள்ள இந்தியாவை பலப்படுத்தும் நோக்கத்துடன் 10 முதல் 15 வயதுள்ள இளம் வீரர்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. 

இதையடுத்து, அதன் முதல் கட்டமாக இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் போட்டிகள் நடத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக 22 மாநிலங்களில் இருந்து 250 மாவட்டங்களில், 2 லட்சம் மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கடுத்ததாக, தேர்வாகும் நபர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. 

இந்நிலையில், இந்த தேர்வு போட்டி, கோத்தகிரி காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சத்தியகத்தி பள்ளியும், உதகை யுனிக் பள்ளியும் விளையாடின. தொடர்ந்து இரண்டு நாட்கள் 9 போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட கால்பந்து ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter