தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் கோவை மாணவிக்கு தங்கம்

கோவை : கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டியில் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியைச் சேர்ந்த மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


கோவை : கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டியில் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியைச் சேர்ந்த மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.



புனேவில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் ஒருபகுதியாக நடைபெற்ற துப்பாக்கிச்சுடும் à®ªà¯‹à®Ÿà¯à®Ÿà®¿à®¯à®¿à®©à¯ இறுதிச் சுற்றுக்கு கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த எம்.காம். மாணவி ஜி. வர்ஷா முன்னேறினார்.

அவருக்கு ஹரியானாவைச் சேர்ந்த வீராங்கனை ஸ்ரின் கோடா கடும் சவாலாக திகழ்ந்தார். இருப்பினும், தனது அசாத்திய திறமையால், ஸ்ரின் கோடாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, 447.1 புள்ளிகளுடன் வர்ஷா முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம், 2-வது கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டியில் வர்ஷா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.



அவரைத் தொடர்ந்து, ஹரியானாவைச் சேர்ந்த வீராங்கனை ஸ்ரின் கோடா 2-வது இடத்தையும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆயுஷி போட் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

தங்கம் வென்றது குறித்து வீராங்கனை வர்ஷா கூறுகையில், " தன்னுடைய கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. துப்பாக்கிச்சுடும் வீராங்கனையான தனக்கு இந்த வெற்றி மேலும் ஊக்கத்தை கொடுக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை வெல்வேது எனது இலட்சியம். எனது இலட்சியத்தை அடைய கடுமையாக முயற்சிப்பேன்," என்றார்.

Newsletter